காலமறியாமல்

உதயமின்றி வானம் வெளுத்திருக்க
புதர்களில் சிறகுகளின் ஆலோபனைகளுடன்
தலையில் உறையிட்டுக் கொண்டு
உலா போகும் மனிதர்கள்..

குல்மோஹரின் மஞ்சள் பூக்களெல்லாம் உதிர்ந்த நிலையில்,
மொட்டவிழ்ந்த கொய்யா மலரொன்று
பனி கொண்டு முகம்துடைத்து சிரித்தது
காலமறியாமல்..

எழுதியவர் : அகிலா (2-Dec-14, 7:41 am)
பார்வை : 76

மேலே