மரணத்திலும் உன்னை மறவேன் -கயல்விழி
![](https://eluthu.com/images/loading.gif)
என்னவனே
உன் மார்போடு நான்
சாய்ந்து
மகிழ்ச்சியில்
திளைத்திருக்கும் போதே
என்னை மரணிக்க சொல்
மறுகணமே
மரணித்து விடுகின்றேன்
மறந்தேனும்
மறந்துவிட சொல்லாதே
பதியின் சொல் கேளா
பாவி ஆகிவிடுவேன்
மரணத்திலும்
உன்னை மறவாமல் .!!!!