பூவாய் வாடுகிறேன்
என்னவனே ....!!!
நீர் இல்லாத மாலையின்
வலி புரிகிறது ....!!!
மாலை பொழுது வரும் ...
வேலையில் நெருப்பில் ..
விழுந்த பூவாய் வாடுகிறேன் ....
நீர் என்னருகில் ....
இருந்த மாலை ....
பொழுதின் இன்பம் ...
இத்தனை துன்பத்தை ...
தருமென்று அறிந்திலேன் ...!!!
குறள் 1226
+
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.
+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 146