கவலைகள்

ஆதாம் ஏவாளுடன்
ஆப்பிளை மட்டுமல்ல
கடவுள் படைத்தது
கவலையையும் கூடத்தான்

கனவுகளாய் பரிணமிக்கும்
நனவின் கவலைகள் !
காடுவரை பின் தொடரும்
தொட்டிலின் கவலைகள் !

மனிதனை அரிக்கும்
மனதின் கவலைகள் !
மானுடத்தை அழிக்கும்
மண்ணின் கவலைகள் !

காலத்தின் கவலைகள்
காவியத்தில் ஒலிக்கும் !
கண்ணீரின் கவலைகள்
கவிதைகளில் ஒடுங்கும் !

கவிதைகளின் கவலைகளால்
சொற்களுக்கு தீப்பிடிக்கும் !
காய்ந்து போன வயிறுகளால்
சொந்தங்கள் வேல் பிடிக்கும் !

மனக்கவலை மறக்க
மதுவைத் தொட்டவன்
மயக்கம் தெளிந்து
மறுபடி பார்க்கையில்
மாய மோகினியாய்
சிரிக்கும் கவலைகள்
மீண்டும் அவனை
மதுவுக்குத் துரத்தும் !

ஒ ! மனிதா !
கவலை கவலை என்று
கவலையையே கல்யாணம்
பண்ணிக்கொள்ளாதே !
கவலையோடு கை குலுக்க
கற்றுக்கொள் !
தட்டிக்கொடுத்து
தரை மேலே நிறுத்தி விடு !
தலை மேல்
தொற்றிகொள்ள
தருணம் தராதே!

எழுதியவர் : ஜி ராஜன் (5-Dec-14, 4:47 pm)
Tanglish : kavalaikal
பார்வை : 265

மேலே