உன் மௌனம் கொடியது

அழைத்தது
நீயே தானே
இன்று ஏனோ
விலகி சென்றாய்

புரியாமல்
நானும் இங்கே
தனியாக
தவித்து நின்றேன்

எனக்கான வாழக்கை
உன் மௌன சிறையில்
கிடக்கிறதே
பதில் வேண்டி பெண்ணே
என் ஆயுள் முழுதும்
வேகிறதே

தரையில் மோதும்
இடியை தாங்கும்
காதல் வலியில் அய்யோ
இந்த நெஞ்சம் சாகும்

மழையின் சாரல்
தீயை மூட்டும்
நிலவின் ஒளியில் அய்யோ
என் உடலும் நோகும்...

இதுதானா
காதல் இதுதானா
பேரன்பே
வீசும் புயல்தானா...

விழிகள் அழுகிறதே
விழி வழி
உயிரும் கரைகிறதே
காதலி காதலுமின்றி
காலங்கள் எரிகிறதே....

எழுதியவர் : தவம் (6-Dec-14, 7:40 pm)
Tanglish : un mounam kodiyathu
பார்வை : 331

மேலே