காதல் வேள்வி
"காதல் வேள்வி "
காதலன் - காதலில், உனக்காக காத்திருப்பேன் நான் அன்பே !
காதலி - காதல் இல்(லை) எனினும் உனக்காக காத்திருப்பேன் அன்பே !.
காதலன் - கண்ணிமையே, உன் கண்களுக்கு கவிகூட்டுதென்றேன் , கவியில்
காதலி - கண் ணின் மையே,காதலா உன் கவி வரிகளுக்கு காரணம், வேறில்லை.
காதலன் - வரந்தருவேன் வா , என்போல் ஓர் உயிரினை உனக்கு, பெரும் வரமாய்
காதலி - வர தருவேன் வா , எண்ணம்போல் எனையே உனக்கு அரும் வரமாய் .
காதலன் - நீரில்லா மீன்போல துடித்தேன் தினம் நான் அங்கு
காதலி -நீர் இல்லா என்னிலையும் அஃதே தான் இங்கு, மாற்றமில்லை .
காதலன் - சரித்திரம் போற்றசெய்வேன் , அன்பே நம் காதலினை காவியமாய்
காதலி - சரி திறம் அறிந்தே கண்ணா, நம் காதலை மனதினில் பதித்திருக்கின்றேன் ஓவியமாய் .
காதலன் -நீர்நிலையாய் நான் இருப்பேன் , நீ குளிர என் நெஞ்சம் நிறைந்த அஞ்சுகமே !
காதலி- நீர் நிலையாய் இருக்க , எனை என்ன செய்யும் எவர் வஞ்சகமே ?.
காதலன் - தாமரை விழிகொண்டவளே ! உன் வரப்பார்வை தருவாயா ?
காதலி - தா மரையின் விழியாள் தான், ஆனால் தாவுகின்ற மானல்ல உன் மடிதவழும்
சிறு மான் நான், பார்வை வரம் கோருகிறாய்,எனையே அரும் வரமாய் தரத்தயார்
பெருவாயா?
காதலன் - தலைப்பு ஒன்று தெரிவிப்பாயா ? இப்பதிப்பும் நல் மதிப்பை பெருவதற்க்கு !
காதலி - தலை பூவை தந்தவனே , தருகின்றேன் தருகின்றேன் , கடுகளவும்
காதலில்லா வரிகளுக்கே இடும்பொழுது, இப்பதிப்பிற்கு என்ன குறை " "