நான்

பொய் கொண்டு பெண்ணை
புகழ்வதற்கு புறம்பாடும்
புலவனல்ல -நான்
பெண்ணை வரணித்து வார்த்தைகள்
தொடர கவிஞனுமில்லை நான் ....
காமத்துக்கு காதல் புனித
ஆடை போர்த்தி
கண்ணைக்கட்டி காட்டில் விடும்
காமுகனுமில்லை நான்
தெரியாத பெண்ணிடம்
இதயத்தை தொலைத்துவிட்டு
பரலோகம் போக நினைக்கும்
படு முட்டாளுமில்லை -நான்
வேம்பு மலரின் உள்ள
தேன் துளி போல்
பாசம் கிடைத்தால்
பாசமெனும் உன் பவித்தர
பாதங்களில்
சரணகதியாகும் அடியேன் -நான்

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (9-Dec-14, 11:34 pm)
Tanglish : naan
பார்வை : 144

மேலே