மறுபடி பிறந்திட வேண்டுகிறேன் பாரதியார் பிறந்த நாளுக்காய்

எட்டய புரத்துச் சூரியனே
==எடுப்பு மீசைக் குரியவனே நீ
கட்டிய பாட்டுக் கோட்டையிலே
==கவிதை வாழுது நாட்டினிலே..

அட்சய பாத்திர கற்பனையால்
==அள்ளி வழங்கிய கவிவள்ளல் நீ
கட்டிய முண்டாசுக் காண்கையிலே
==கவிதை சுரக்குது நெஞ்சினிலே..

பன்மொழி கற்றுத் தெளிந்தவனே
==படைப்புகளால் சிலிர்க்க வைத்தவனே நீ
இன்மொழி நம்மொழிக் கீடில்லை
==என்றே அடித்துச் சொன்னவனே

பெண்ணுக் குரிமை கேட்டன்றே
==பெரும்போ ராளியாய் ஆனவனே நம்
கண்ணெனும் தேச விடுதலைக்காய்
==கணீரெனக் குரலும் கொடுத்தவனே

இன்னமும் நினைவு ஏட்டினிலே
==எழுதியே உன்னை பாடுகின்றேன் கவி
மன்னனே மகா கவியே நீ
==மறுபடி பிறந்திட வேண்டுகிறேன்

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (11-Dec-14, 2:32 am)
பார்வை : 751

மேலே