ஆதங்கம்

மனம்முழுதும்
கனவுகள் ததும்பிட
பத்து திங்கள்
மடியினில் சுமந்து பெற்ற
மலர் கருகியதன் துயர்வாழும்
அன்னையின் நிலை அறிவாயோ?

நித்தம் காலை உச்சிமுகர்ந்து
பள்ளியனுப்பிய அவள்
உன் உதிரம் கண்டிட
காத்திருந்தாளோ இத்தனை காலம்??

பூவிதழ் மனங்கொண்டு
வண்ணவண்ண கனவுகள்
நித்தம் கண்ட
நஞ்சறியா பிஞ்சுமுகம்
அதைக் கொய்தவன்
கொடும்பாவியில் கொடியவன்!

அழகுமலர் தோட்டத்தில்
சிரித்திட்ட சில்வண்டு
நினைத்திருக்குமோ தான்
சிலப்பொழுதுகளில்
சில்சில்லாய் போவோமென்று!!!!

மலர்களில் தீவைத்த
மனம் மறத்த மனிதா...
நீ செய்திட்ட செயல்
முன்னே அறிந்திருப்பாளோ
உன் அன்னை? இல்லை.

மார்முட்டி நீ
பசியாறுகையில் நஞ்சு
கலந்திருப்பாள் அன்றே
தெரிந்திருந்தால்!!!

தீவிரவாதம் கையிலெடுத்த
மதிமழுங்கிய மூடர்களே
உங்கள் உதிரத்திலாவது
இருந்திடுமோ ஈரம்?????
-கவிராம்

எழுதியவர் : கவி ராம் (17-Dec-14, 11:09 pm)
பார்வை : 142

மேலே