புதைகையும் தலைமுறை

..."" பு(தை)கையும் தலைமுறை ""...

வெண்சுருட்டு புகையெனும்
போதையினில் பேதலித்து
விரலிடுக்கு ஆறாம்விரலாய்
ஆயுளை குறைத்திடும் வடு
இளைய தலைமுறையின்,,,
போதையெனும் கொடியநோய்
தன் நேசக்கரத்தில் இறுகப்பிடிக்க
இங்கு ஒரேயொரு காரணமே
பெற்றோரிடம் குழந்தைகளின்
நெருக்கத்தை தூரவே விட்டு
நேரமில்லை என்றே சொல்லி
அச்சடித்த காகிதத்தை சேகரிக்க
ஆவலாய் அதன்பின் ஓடுவதால்
அறிந்துகொண்டே செய்யும் தவறு
புரிந்துகொண்டே தொடர்கின்றது
ஆத்திரம்கொண்டு ஆவேசமே
பொங்கிய முண்டாசு காவியம்
பாரதியின் அக்கினி குஞ்சுகள்
காட்டையன்றோ அழித்தது
உதட்டோரம் முத்தமிடும்
கொளுத்திய அக்கினி குச்சி
எங்கள் கூட்டையே எரித்தது

"" இது எனக்கான கவியும்கூட ""

என்றும் உங்கள் அன்புடன்,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (22-Dec-14, 2:53 pm)
பார்வை : 65

சிறந்த கவிதைகள்

மேலே