பெருங்கவி இயற்கை -2 ரகு
அனல்தெறிக்கும் பகலோனைக் -கூடி
அழகாய் மறைத்துவிட்டு -புவிக்
கனல்தன்னைப் போக்கிய -அழகுக்
கார்கால மேகங்களே -எனில்
தோன்றும் கவிதைக்கா -சற்றேத்
தொலைந்து கலைகிறீர் -நீவீர்
திரண்டுப் பொழியும் -மழை
திகட்டாதக் கவியன்றோ !
=============
எல்லைத் தொடும்வரை -எந்த
இடர்த் தடுத்தாலும் -ஓய்வே
இல்லை(?)என்றோடும் -நதியே
இரைந்து கேட்கிறாய்க்கவி ?-உனில்
துள்ளும் மீன்களும் -கரைத்
தொட்டுவரும் நாணலும் -அலை
வெள்ளியாகித் தவழுதலெனக் -கவி
வார்த்திருத்தல் நீதானே!
=============
எங்கேயோ உருவாகி -வந்து
இதமாய் உரசிவிட்டு -என
தங்கங் குளிர்வித்தக் -குளிர்
தென்றலே கவிகேட்டாய்?-வழி
எங்கும் பரவிப் - புவி
இருப்போரை மகிழ்வித்து -நீ
தங்கத் தேர்ந்த -அந்தத்
தோட்டங்கள் கவிதானே !
=============
ஒளியைச் சுமந்தபடி -அழகாய்
உலவும் வெண்மதியே -வின்
வெளியிலி ருந்துகொண்டு -நீ
வினவினாயோக் கவி-யொன்று?
துளியும் களங்கமிலா -உன்
தேக வெளிச்சத்தில் -புல்
வெளியும் ஒளிர்கிறதே -இருள்
விலக்கல் கவியன்றோ !
==============================தொடரும்