தமிழ் மீனவனின் வாழ்கை - உதயா

அணுகுண்டு வைத்து
யார் உயிரையும் பறிக்கல....

ஆயுதமேந்தி
எவரையும் துன்புருத்தல.....

ஆள் கடத்தல்
செய்யல...

ஆள் மாறாட்டம்
பண்ணல...

ஊழல்
செய்து பிழைக்கல...

ஊர்சொத்தை
கொள்ளையடிக்கல.....

மது விக்கல..
மாதுவும் விக்கல...

கலவரம்
செய்யல.....

பேருந்தை
கொளுத்தல...

மரத்தை
வெட்டல...

மனிதனை
அடிமையாக்கல......

நாங்கள்
செய்ததெல்லாம்
ஒன்றுதான்....

உயிர் வாழ
பிழைப்பை
தேடி
கடலுக்கு
சென்றோம்...

எல்லை
கடந்ததாக
காரணம் கூறி
எங்கள்
உயிரை
பறித்துவிடுகின்றனர்......

கண்ணீர் சிந்தும்
உறவுகள்..

கடுகளவு
மனமிறங்கா
அரக்கர்கள்
செய்யும்
பாவங்கள்......

தொடரும்
தமிழனின்
கதறல்கள்...

தமிழனின் சாபமா????
தமிழனாக பிறந்த பாவமா????

விடைதெரியாமல்....
உயிருக்கு உத்தரவுயில்லாமல்...
தினம் தினம்
மரண பயத்தோடு
தொடரும்
தமிழ் மீனவனின்
வாழ்கை.......

எழுதியவர் : udayakumar (28-Dec-14, 6:26 pm)
பார்வை : 105

மேலே