விட்டில் பூச்சிகளின் வினாக்கள்

பட்டாம் பூச்சி இறகுகள் என்
பார்வையில் தேவதை உதடுகள்.....!!

பேசும்போது அசைவுகள் நினைவை
பேதலிக்க வைக்கும் கவிதைகள்...!

அழகை ரசித்து கவிஞனானேன்
அவளை நினைத்து கரையலானேன்..!!

அறிவைக் கொடுத்த இறைவனே - ஆசை
அளவை குறைத்துக் கொடுத்திருந்தால் என்ன ?!

தணலும் குளிர தகிக்கும் காதல்
தள்ளவே நினைத்தும் தடுக்கிடும் உள்ளம்

தரணியில் உயிர்களின் நிலையும் இதுவோ ? இறைத்
தலைவனே சொல்லு நீ - காதல் இம்சை - தாங்குதல் சரியோ ?!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் வா (28-Dec-14, 5:35 pm)
பார்வை : 96

மேலே