ஒப்பில்லா அழகு

எழுத்தோடு இணைந்த பின் 'அழகு' என்ற சொல்லை பல முறை கேட்க முற்பட்டேன். அதை ஒத்து ஒரு படைப்பு, என் கனவு காதலியை எண்ணி..!!

விழி அழகு மொழி அழகு
விதி யாதென அறியாமல்
உன்னை தேடி வரும் என்
வழியும் அழகு

சொல்லழகு முத்துப்பல் அழகு
நடக்கயில் பீதாம்பரமாய்
பூமியை தினம் படரும்
பட்டுப் பாதம் அழகு

பேச்சழகு மூச்சழகு உன்
இல்லத்தாழ் திறக்கின் முகிலையும்
மேகத்தினுள் மறைக்கும்
முத்து முகம் அழகு

கண்ணில் அந்த புருவம் அழகு
உன்னில் தோன்றின் கருவம் அழகு
அறுவை சிகிச்சையின்றி என் இதயத்தை பறித்த
அந்த பருவமும் அழகு

உடை அழகு நடை அழகு
ஆலயமணியின் இசைக்கேற்ப
அசைந்தாடும் உன்
மெல்லிடையும் அழகு

அழகு அழகென உனை சொல்லால் மாலைசூட்டி
உயிரையும் மெய்யையும் மணமுடித்த
இப்பாவை நீ கேட்கின், உன் இருகரம் கொண்டு
கண் மூடும் அந்த நாணமும் அழகு

காகமாய் கரைந்த நான்
காற்றடித்து உன் கார்குழல் என்மேல் பட
கூவும் மயிலானதால்
நானும் அழகு

வள்ளுவனும் அகத்தியனும் செதுக்கிய இச்செம்மொழியில்
உன்னை எழுத
வார்த்தை விளைந்ததால்
என் கண்ணே! தமிழும் அழகு!

எழுதியவர் : வசந்த்குமார் (29-Dec-14, 12:57 am)
பார்வை : 91

மேலே