வசந்த்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வசந்த்குமார்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  21-Jun-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Dec-2014
பார்த்தவர்கள்:  84
புள்ளி:  10

என்னைப் பற்றி...

நாட்டின் மேல் நாட்டம் கொண்டு வாழ்க்கை சற்றே ஆட்டம் கண்டு, இருப்பினும் என்ன அனைத்திற்கும் மாற்றம் உண்டு என வாழும் தொற்றமிழன்.

என் படைப்புகள்
வசந்த்குமார் செய்திகள்
ஜின்னா அளித்த படைப்பில் (public) velu மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Nov-2014 8:49 pm

ஏகாந்த இரவில்
ஏகாதிபத்திய இளமைக் குமுறலில்
சுய நினைவை இழக்கும்
சுய இன்பத்தின்
சில நொடிகளாய்....

விருப்பம் இல்லாமல்
விளக்கை அணைக்காமல்
வெட்கமும் படாமல்
ஒருதலைப் பட்சமாய்
உச்சகட்ட வேட்கையோடு
வேட்டையாடி தொடங்கி வைத்த
முதல் அரங்கேற்றத்தின்
கடைசி ஆட்டமாய்....

அமானுஷ்ய வேகத்தில்
ஆர்ப்பரிக்கும் மோகத்தில்
தணிக்க முடியா தாகத்தில்
விருப்ப மற்று உள்ளே சுரந்து
வீரியமற்று வெளியே கசியும்
வெள்ளை வியர்வைத் துளிகளாய்....

வயதை புறந்தள்ளி
விரட்டலாகாத விரக தாபத்தில்
பணத்தால் அமைக்கப் பட்ட
பஞ்சு மெத்தை கூடாரத்தில்
அற்ப பசியால் அடைக்கப்பட்ட
அடிமைக் காமத்தின் அகதிகளாய

மேலும்

உம் வார்த்தைக்கு வர்ணனை செய்ய வார்த்தை இல்லை!!! 10-Jul-2017 6:44 am
ஆழமான வார்த்தைகள் 02-Jul-2017 10:50 am
மெய்சிலிர்க்கும் படைப்பு தோழரே ஆணித்தனமான வரிகள் தோழரே 28-Mar-2017 9:24 am
எல்லா வரிகளும்.. மெய்சிலிர்க்கும் படியாக இருந்தது.. வாழ்த்துக்கள். நல்ல படைப்பை படித்தேன் என்ற .நிறைவுடன். 22-Sep-2015 2:09 pm
பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) karguvelatha மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Jan-2015 2:32 pm

நியூட்டன் சொல்ல மறந்த ,
நான்காம் விதியோ ..
நியூட்ரினோ துளைக்க இயலா ,
அற்புத சிலையோ ..

டாவின்சி மெதுவாய் தீட்டிய ,
மோனலிசா ஓவியமோ ..
அப்ச்கிரா பயத்தில் பிகாசோ ,
எரித்த ஓவியமோ ..

சலீம்அலி கண்ணில் படா ,
அரிய பறவையோ ..
கலாம் கைகள் கண்ட ,
அணுஆயுத நிகழ்வையோ ..

அரிஸ்டாட்டில் சிந்தைக்கு எட்டா ,
தத்துவ கிடங்கோ ..
ராமானுஜன் விரல்கள் சொல்லா ,
கணிதக் குறிப்போ ..

டி.என்.ஏ கடத்த இயலா ,
மரபு செய்தியோ ..
ராவணன் கடத்தி அடைத்த ,
சீதையின் தமக்கையோ ..

(யாரிவள் - தேடல் தொடரும் )

மேலும்

ஏன் சகோ ஏன் இப்படி ... முடியல ... வரவிலும் கருதிளோம் மகிழ்ந்தேன் தோழரே ,, நன்றிகள் பல .. 26-Jan-2015 12:17 pm
பிரமன் அலைகிரான் எனக்கு தெரியாமல் இருக்கும் அழகிய படைப்பா நான் :யாரது அப் பெண்மணியா? பிரமன்: இல்லை அந்த கவிதான் அடுத்த பிரமனே நின் படைப்பு தொடரட்டும் வாழ்த்துகளுடன் மு.அனந்தராமன் 26-Jan-2015 7:19 am
கண்ணாடி 23-Jan-2015 11:54 am
ஹ ஹஹா........... அணுக்களில்.. தெறித்த...... முத்துப் பரல்களோ..... இக் கவிதை..... தூள்..... அறிவியல் கவிதையில்.... அறிந்த தகவல்கள்...... அவளின்.... அறை மறந்த கண்ணாத் துகள்கள்..... 23-Jan-2015 11:54 am
வசந்த்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2015 1:15 am

நடுத்தர வீடு.. பாட்டு பாடி கொண்டிருக்கும் மகன்..

அம்மா: ஐயையோ.. நம்ம புள்ள வேலை கெடைக்காததால வேலை இல்ல நு சொல்லிட்டே சாகறான் போலருக்குங்க..!!
அப்பா: அட..!! ச்சி..!! அவன் VIP பாட்ட அனிருத் ஸ்டைல்ல பாடுறான்டி..!!

மேலும்

கிருத்திகா தாஸ் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Jan-2015 5:15 pm

அடுக்கடுக்காய் வீடுகள் கொண்ட
மலையடிவாரக் கிராமத்தின்
ஒடுக்கப்பட்ட கிணற்றினடியில்
பதுங்கி இருந்தான் , அவன்


தூரத்து மலை இருட்டில்
கரிய நிறம் மறந்த காக்கைகள்
செங்குருதி மண்ணில்
புழுதி கொத்திக் கொண்டிருந்தன


வரிசையில் , கடைசியாய்
நின்று கொண்ட , அவனுக்கு
ஈக்கள் மொய்த்த
கொட்டாங்குச்சியும் மறுக்கப்பட்டது


வவ்வால்கள் வட்டமடித்த
சிதிலமடைந்த கோயில் வாசலில்
விளையாடிக் கொண்டிருந்தது
செருப்பணியாத அந்தக் குழந்தை


பிணங்கள் மறுக்கப்பட்ட
தெருவொன்றில் - செங்குத்தாக
நின்றிருந்த அந்தத் தேரில்
கண்மூடிச் சரிந்திருந்தான் அவன்


கற்குகைக்குள் ஒடுங்கிக்கொண்ட ,
முண்டாசு கட்டிய அவன்

மேலும்

நற்சிந்தனை , சாதிக்கு சாட்டையடி , வாழ்த்துக்கள் தோழி . 16-Feb-2015 10:45 pm
நன்றி ஐயா...!! 28-Jan-2015 10:49 pm
நன்றி தோழா...!! 28-Jan-2015 10:49 pm
அருமை..! புதிய கோணத்தில் அருமையான கவிதை..! 24-Jan-2015 2:11 pm
வசந்த்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2015 9:13 pm

நெற்றியில் கரத்தை வைத்து
ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து
பட்டம் வாங்கிய பிள்ளையை காட்டிலும்
கருமேகம் வட்டமிடுவதை கண்டு
கண்கலங்கும் அவன்!

கைபேசியை காதலித்து கணினியை மணமுடித்து
பணம் தான் அண்டம் என வாழும்
தண்டன்களுக்கு மத்தியில்
வட்டி வாங்கி கடன் தாங்கி
பிறர்க்கு உணவளிக்கவே பிறந்தவன் அவன்!

ஆடம்பரத்தை அம்பலபடுத்த
தொலைகாட்சி முன் அமர்ந்து
பீட்சாவும் பர்கரையும் உண்ணும் இப்பாரில்
கூழையும் கஞ்சையும் உண்டு ஆடம்பரத்தை
தொலைவில் ஒரு காட்சியாக மட்டும் வைத்து
வாழும் அவன்!

பனாரஸ் பட்டையும் ஆலென் சாலியையும் அணிந்து
கண்ணாடியின் முன் காலம் கழிக்கும் மாந்தரின்கண்
விழியில் நீர்

மேலும்

வசந்த்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2014 12:57 am

எழுத்தோடு இணைந்த பின் 'அழகு' என்ற சொல்லை பல முறை கேட்க முற்பட்டேன். அதை ஒத்து ஒரு படைப்பு, என் கனவு காதலியை எண்ணி..!!

விழி அழகு மொழி அழகு
விதி யாதென அறியாமல்
உன்னை தேடி வரும் என்
வழியும் அழகு

சொல்லழகு முத்துப்பல் அழகு
நடக்கயில் பீதாம்பரமாய்
பூமியை தினம் படரும்
பட்டுப் பாதம் அழகு

பேச்சழகு மூச்சழகு உன்
இல்லத்தாழ் திறக்கின் முகிலையும்
மேகத்தினுள் மறைக்கும்
முத்து முகம் அழகு

கண்ணில் அந்த புருவம் அழகு
உன்னில் தோன்றின் கருவம் அழகு
அறுவை சிகிச்சையின்றி என் இதயத்தை பறித்த
அந்த பருவமும் அழகு

உடை அழகு நடை அழகு
ஆலயமணியின் இசைக்கேற்ப
அசைந்தாடும் உன்
மெல்லிட

மேலும்

அழகு. 03-Jan-2015 2:10 pm
வள்ளுவனும் அகத்தியனும் செதுக்கிய இச்செம்மொழியில் உன்னை எழுத வார்த்தை விளைந்ததால் என் கண்ணே! தமிழும் அழகு! // உங்கள் சிந்தனை பேரழகு . தொடருங்கள் .. 03-Jan-2015 1:49 pm
நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 29-Dec-2014 10:17 am
வசந்த்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2014 8:59 pm

கிழிந்த காகிதமாய்
காற்றில் பறந்த என்னை
கற்பனைக்கு எட்டாத
காவியமாய் மாற்றினாய்..

உன் இதயம் என்ற ஏட்டில்
முதல் பக்கமாக என்னை தாங்கி...!!!!

மேலும்

தங்கள் வாழ்த்திருக்க நிச்சயம் செய்வேன்... நன்றி 29-Dec-2014 12:34 am
இதபோல் - இதுபோல் 28-Dec-2014 12:36 am
நன்றாக தாங்கட்டும் இதபோல் கவிதைகள் தொடங்கட்டும்...! 28-Dec-2014 12:36 am
ஹா ஹா.. அது கிழிஞ்சி பல நாள் ஆகுது..!! ;) 26-Dec-2014 10:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
ஜி ராஜன்

ஜி ராஜன்

புனே, மகாராஷ்டிரா
முரளி

முரளி

Chennai
சு.அய்யப்பன்

சு.அய்யப்பன்

கோவில்பட்டி

இவர் பின்தொடர்பவர்கள் (11)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (11)

சிவ சூர்யா

சிவ சூர்யா

மயிலாடுதுறை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே