எந்தன் காதல் என்னவளின் மேல்
ஊசி வீசும் உன் பார்வையால்
கூசி போகும் என் மனதினை
தொலைத்திட துணிந்தேன்
உன்னிடத்தில் !!...
காணும் இடமெல்லாம்
உன்முகம் தான் தெரிகிறதே ...
காற்றின் மொழிகூட
உன்பெயரை சொல்கிறதே !!...
கடலின் அலைகள் என்றும்
கரையாய் தொடுவது போல்
எந்தன் இதயமெங்கும்
உந்தன் நினைவுகள் தொடுகிறதே !!..
நொடிப்பொழுதும்
உனை நினைத்தேனே
எனை நானே மறந்தேனே - அன்பே!
இன்றோ
முழுவதுமாய் மறைந்தேனே
பெண்ணே உன்னால் தானே !!....