வெப்பம்

முப்பது நிமிடங்களில்..
மனித உடலிலிருந்து உருவாக்கப்படும்
வெப்பத்தினால் மட்டுமே
அரை கலன் நீரை
கொதிக்க வைக்க முடியுமாமே!...
..
அப்படியெனில்..
வாயிலிருந்து வெளிவரும்
வசை பாடும் சொற்கள் ஏற்படுத்தும்
வெப்பமும் சேர்ந்தால்..
அப்பப்பா..!
அதனால்தான்
அய்யன் வள்ளுவனும்
இன்னாத சொல் விடுத்து
இனிய சொல்
தேர்வு செய்ய குறள்
தீட்டினானோ!

எழுதியவர் : கருணா (1-Jan-15, 11:43 am)
Tanglish : veppam
பார்வை : 288

மேலே