மடமை தீர மதுவை ஒழிப்போம்

நீலி கண்ணீர் வடிக்காதே!
பீலி இறகாலும் விசுறாதே
துக்கம் பிறர் தூக்கம் தொலைக்கும்
மதுவை மட்டும் விற்காதே!!

ஒருநாள் இலவசம் தந்து ஓட்டு பெற
மங்கையின் மாங்கல்யம் பறிக்காதே!
உயிருக்கு உலை வைக்காதே
பொல்லாத போதை சாக்கடையில் இளைஞரை தள்ளாதே!!
தரித்திரம் பிடித்து சரித்திர சாபத்திற்கு ஆளாகாதே!!

வெட்டியான் வேலையும் வேண்டாம் சீக்கிரமாய்
வேட்டி சேலை மிக்சி கிரைண்டர் கேஸ் அடுப்பு
மடி கணினி டிவி மின்விசிறி எதுவும் வேண்டாம் இலவசமாய்!
மதுவை வழங்கி கண் பறித்தால் மகிழ்ச்சியென்பது எங்ஙனம்?

கல்லா பெட்டியை நிறைப்பதற்கு
கழுத்தை அறுப்பது தான் சரியா ?
சம்பளம் ஏதும் இல்லாமல்
சோம்பலாக்கிடுவது தான் உன் முடிவா ?

கனவு காணுங்கள் இளைஞர்களே !!
கலாம் சொன்ன நிலையதுவே !
மதுவில் மயங்கி கிடக்கும் வரை
மடமை தீர வழியில்லையே!!?

நமது தேசம் வல்லரசாக
நம்மை ஆளவேணும் ஓர் நல்லரசு !
அது தெரியா அடிமைகளே -அதுவரை
ஆங்கிலேயர் கண்ட குரும்பாடுகளே !

எழுதியவர் : கனகரத்தினம் (6-Jan-15, 3:43 am)
பார்வை : 76

மேலே