மதியும் மாதுவும் - ஒரு கற்பனை

மதியும் மாதுவும் மலர்ந்ததொரு கற்பனை...!
பெண்ணுக்கு பெண்ணேதான்
போட்டியென்று சொன்னார்கள்;
மதிக்கும் மாதுவுக்கும் -
மலர்ந்ததொரு கற்பனையிதோ..!
ஓவியமாய் நடந்தவளை
ஓசையின்றி பார்த்துவிட,
தென்றலதின் வாசணையில் -
தெரிந்தவுடன் மறைந்தாளோ..!
பெண்மையவள் மேனியதை
பேரழகாய் வடிவமைத்த,
வெண்மையெனும் போர்வைக்குள் -
வேண்டுமென்றே ஒளிந்தாலோ..!
காற்றோடும் கவிபாடும்
கன்னியவள் மேலாடை ;
காணாத முகிலென்று -
கடன்வாங்கச் சென்றாளோ..!
கார்குழலா யவள்கூந்தல்,
கவிபாடு மவள்கண்கள்;
கால்கொண்டு நடந்துவர -
கனவுக்குள் போனாளோ..!
கர்வத்தி லிருபெண்கள்
கண்மூடி வித்தைகளை ,
காணாத விளையாட்டாய் -
கவிதைக்குள் சொல்லிவிட்டேன்...!