இப்படி நாம் காதலிப்போம் - பொங்கல் கவிதைப்போட்டி 2015”

இப்படி நாம் காதலிப்போம் !!
******************************************
இறைவனுக்கும் இயற்கைக்குமான இறுக்கம் போல,
கவிஞர்களுக்கும் கற்பனைக்குமான உறவு போல,
இதழுக்கும் முத்ததிற்குமான பிணைப்பு போல,
விரலுக்கும் விசைப்பலகைக்கும் உள்ள தொடுதல் போல,
பெண்மையின் நாணமும் ஆண்மையின் பலமும் சேர்ந்த கலவைபோல,
கூந்தலுக்கும் அவன் சூட்டி விட அவள் சூடிக்கொள்ளும் பூக்கள் போல,
மாசுகள் கலந்து பெய்யும் மழைத்துளியை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பூமி போல
நீரால் தணியும் தாகம் போல,
கண்ணுக்கும் கண்ணீருக்கும் உள்ள நட்பு போல,
இரவுக்கும் உறவுக்குமான நெருக்கம் போல,
எரிந்து கருகியபின்னும் மிச்சமாகும் எலும்பை போல.
தொட்டுத்தழுவும் கடல்அலையுடன் கைகோர்த்து நடக்கும் பாதம்போல,
இரு இதழுக்கும்மான விலகாத காதல் போல
---நாமும் என்றுமே காதல் செய்வோம் .,
இறைவன் தந்த அற்புத இயற்கையில்
---கொஞ்சம் கடன்வாங்கி கருகலைப்பில்லாத கண்ணிய காதல் செய்வோம்.

இனியேனும் எல்லோரும் காதல் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
-------- "பெண்மையின் மனம் ஒன்றும் அவ்வளவு ஆழமில்லை.
நீந்தப்பழகுங்கள் நிச்சயம் வெற்றி உண்டு .!!

எழுதியவர் : ஜென்னி (8-Jan-15, 12:23 pm)
பார்வை : 153

மேலே