இப்படி நாம் காதலிப்போம் - பொங்கல் கவிதை போட்டி - 2015

உடலுக்குள் உயிராய்
கண்ணுக்குள் கருவிழியாய்
முகம் காட்டும்
கண்ணாடியாய்

உன் அன்பிற்கு அடிமையாய்
உனக்கு உரிமையை
எனக்கு நீயென
உனக்கு நானென
நாமிருப்போம்

புன்னகையை சொந்தமாக்கி
பூமியெல்லாம் பூத்து குலுங்கும்
புன்னகை பூக்களாக்குவோம்

வானவில்லுக்கு வண்ணங்களாய்
நம் அன்பை தீட்டுவோம்

பொன் இனிது பொருள் இனிது
என்போருக்கு நம்
காதல் இனிதை கற்று கொடுப்போம்

சாதி பெரிது மதம் பெரிது
என்போருக்கு நம்
காதல் பெரிதென புரியவைப்போம்

யாழ் இனிது குழல் இனிது
என்போருக்கு நம்
காதல் பெரிதென புரியவைப்போம்

கண்ணை காதலிக்கும்
கருவிழியாக
கையை காதலிக்கும்
கைரேகையாக
நாம் காதலிப்போம்

தமிழருக்கு தமிழாக
உயிருக்கு நிகராக
காதலுக்கு உண்மையாக
காதலிக்க நாமிருவரும்
கருவறையில் நாம் வளர்வோம்



இந்த கவிதை என்னால் எழுதப்பட்டது
பெயர் :இன்பகுமார் .மு
இடம் : வேலூர் மாவட்டம் , சென்னங்குப்பம் .
இந்தியா, தமிழ்நாடு
அலைபேசி : 9597128761

எழுதியவர் : இன்பகுமார் (8-Jan-15, 4:44 pm)
சேர்த்தது : இன்பகுமார்.மு
பார்வை : 82

மேலே