சாதிக்கு பேதி கொடுப்போம்

அந்த வண்ணானுக்கு சொல்லி அனுப்பு
வந்து வெள்ளைத்துணி கட்டட்டும் !
அந்த அம்பட்டனுக்கு சொல்லி அனுப்பு
வந்து மங்களமேளம் முழங்கட்டும் !
அந்த பறையனுக்கு சொல்லி அனுப்பு
வந்து குருத்தோலை பின்னட்டும் !

ஏம்ப்பா ! அந்த பறையன கூப்புடு ஊருக்கு பறையடிக்க;
ஏம்ப்பா ! அந்த அம்ப்பட்டன கூப்புடு தாடிய வயிச்செடுக்க;
ஏம்ப்பா ! அந்த வண்ணான கூப்புடு வாய்க்காரிசி புடிக்க;

இந்த ஏளனப் பேச்சுகள் கிராமப் புறங்களில்
அங்கெங்கெனாதப்படி இன்றும் ஒலித்தப்படி….!

இப்படியாக நல்லதிலும் கெட்டதிலும்
உங்களோடு ஒத்தாசை புரிபவர்களுக்கு
நீங்கள் அளிக்கும் ஆணவப் பட்டம்
அவன் உங்கள் அடிமை என்கின்ற
இராணுவச் சட்டம் !

டேய்..! வண்ணாம்மூட்டு சோத்தை துண்ணாதடா
நீ மண்ணாப் போயிடுவ !
டேய்..! அம்ப்பட்டன் வீட்டு அழகியப் பாக்காதடா
நீ அழிஞ்சிப் போயிடுவ !
டேய்…! பறையன் வூட்டு பொணத்தைப் பாக்காதடா
நீ பொதைஞ்சிப் போயிடுவ !

இப்படியான பழமொழிகள் முதுமொழிகளாய் இன்றும்,
எந்த சட்டத் திட்டங்களையும் மதியாமல்….

ஆனால் இட ஒதுக்கீட்டில் மட்டும்
இருபது விழுக்காடு கட்டாயம் வேண்டுமாம் !
என்ன இது அந்நியாயம்
யார் சொல்வார் நியாயம்
அரசே நீ ஏமாந்தால்
உனக்கே பூசிடுவார் சாயம் !

அழுக்குத்துணி வெளுப்பவன் இல்லையென்றால்
பழுப்பேறிப்போகுமே உன் ஆடை !
மருத்துவ குலத்தோன் இல்லையென்றால்
செம்பட்டையாகுமே உன் தலை !
பறையர் இனத்தவன் இல்லையென்றால்
பிணவாடை வீசுமே உன் அறை !

ஓட்டு கேட்டுப் போகும்போது மட்டும்
உசந்தவனாக தெரிகின்றானே அம்மூவரும் !
அவன் வீட்டு வாயிலை தேவுடு காத்து
அழைத்துச் செல்கின்றாயே ‘கார்’மூலம் !

சுகபோகமாய் நீங்கள் வாழ;
யுகம் யுகமாய் அவர்கள் தேய;
வெறும் பகல் கனவாய்ப் போனதே
அந்தப் பாவப்பட்ட ஜீவன்களின் ஆசைகள் !

வண்ணாரப் பையலுக்கு வெள்ளாடை ஒரு கேடா ?
அம்பட்டைப் பையலுக்கு கால்செருப்பு ஒரு கேடா ?
காலனி பறைப்பயலுக்கு உயர்கல்வி ஒரு கேடா ?
சக்கிலி பையலுக்கு சம்சாரம் ஒரு கேடா ?
செம்பட பையலுக்கு சந்தணம் ஒரு கேடா ?
வில்லி பையலுக்கு வெள்ளாமை ஒரு கேடா ?
நாடோடி பையலுக்கு நாட்டாமை ஒரு கேடா ?

அட சண்டாளப் பையல்களா….!
முண்டாசு கவிஞன் மட்டும்
முப்பதுல சாகாம இருந்திருந்தா…,
இநேரம் உங்களையெல்லாம்
கண்டம் துண்டமா வெட்டி
காக்காகளுக்குப் போட்டிருப்பான் !

சாதிக்கு சுடுகாடு தள்ளி வச்சான் – அவன்
சந்தண கட்டையிலா உனக்கு கொள்ளி வெச்சான் ?
சுள்ளியிலே கொள்ளி வெக்கும்போதே
கொல்லையிலே போறவனே என்ன ஏத்தம் !

முளையிலே மிளாகாய கிள்ளி வெச்சி
பிஞ்சு நெஞ்சிலே வஞ்ச நஞ்ச தச்சி
தன் சமூகத்தை வளர்ப்பதற்கே இராப்பகலா பாடுபட்டா…
பிறகெங்கே சுமூகத்தீர்வை பிறசமூகம் காணப்போகுது ?

ஏகாளி வரலன்னா உன் சாவுக்கு ஆரு பாடை கட்டுவா ?
முடியாளி வரலன்னா உன் கருமாதிக்கு ஆரு தாடி மழிப்பா ?
பறையாளி வரலன்னா உன்எழவுக்கு ஆரு பறையடிப்பா ?

எல்லாம் தெரிஞ்சிருந்தும் எகத்தாளம் பேசுறீயே !
அவன் உழைப்பை சுரண்டிக்கிட்டு அவனயே ஏசுறீயே !

பொண்சாதி இருக்க, வேற பெண்சாதியிடம் போறவனே!
உன்சாதி அப்போ உனக்கு உசந்ததாத் தெரியலயா…..?
அட சண்டாளப் பயலே ! சாமின்னு ஒண்ணு இருந்தா..
உன்னைத் தொண்டையில குத்தி கொன்னேப் போட்டிருக்கும்!

வீதிக்கு வீதி நீ சாதி மாநாடுப் போட்டாலும்
அடிக்கடி உனக்கு பேதி மருந்து கொடுக்க;
ஆதியிலேருந்து ஒருத்தன் பிறந்துக்கிட்டேதான் இருக்கான்!

கீழ் சாதிக் காரனென்று என்னை இழிக்கின்றாய்;
மேல் சாதியில் நீ பிறந்து, என்னத்த கிழித்து விட்டாய் ?
மேல் நாட்டுக்காரன் நம்மல காரி உமிழுறான் !
மேல் தட்டில் நி பிறந்தும் நரி வேஷம்தான் போடுற !

வண்ணாத்தி வரலன்னா…, புதுசா சமைஞ்ச
உன் பொண்ணோட தூமைத்துணிய துவைக்க,
நி வெச்சிருக்கும் வெப்பாட்டியா வருவா..…?

அய்இரு மாதாமா நீ செஞ்ச சில்மிஷத்தால்
அவசர சிகிச்சைக்கு அம்பட்டச்சி வரலன்னா
உன் சிசுவுக்கு யாரு கியாரண்டித் தருவா ?

அட வெளங்காத வெறும் பையலே !
இப்போதாவதுப் புரியுதா ? உன் சாதி உனக்கு
அப்போது உதவிக்கு வராதுன்னு….!

தொழிலை வெச்சித்தான் சாதியப் பிரிச்சான் !
உன் சாதிய வெச்சா தொழிலைப் பிரிச்சான் ?
இன்று சாதிய வெச்சுதான் அரசியலே நடக்குது
அந்த அரசியலே இல்லன்னா உன்சாதியும் ‘0’தான் !

மேல் படிப்பு படிச்சி நாங்க ஆபிஸ்சுல
மேல் ஆபிஸசரா இருந்தாலும்,
பிஸ்கோத்து குமாஸ்த்தாவும் எங்களை
ஒரு தினுசாத்தான் பாக்குறான் !


மனுசால மதிக்காத மானம் கெட்ட சாதிங்க
மிருகத்தை தின்னுகிற மிருகத்துக்கு சமங்க !

இது எகத்தால பேச்சு இல்ல; என் மனசுல
நெடுநாளா நெருஞ்சிமுள்ளா தச்சிக்கிட்டுருந்த
பெரும்பார சுமைகள் ! அதை இறக்கி வைக்க
வாய்ப்பளித்த எழுத்து.காம்-க்கு, என் மனமார்ந்த
நெடுஞ்சான்கினை நன்றிகள் !
வாசிக்கும் அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள் !

எழுதியவர் : இரா.மணிமாறன் (8-Jan-15, 10:14 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 176

மேலே