செக்குமாடு

MBA படிச்சஒருத்தன் கிராமத்துக்குபோறான்..

அங்கே ஒரு செக்குமாடு மட்டும்தனியா செக்கு சுத்திட்டுஇருக்கு..

அவனுக்குஆச்சரியமாஇருக்கு..,

பக்கத்திலஒருகுடிசைக்குள்ள ஒரு விவசாயிசாப்பிட்டுட்டு
இருந்தாரு..

அவர்கிட்டகேட்டான்…

MBA : மாடுமட்டும்தனியாசெக்கு சுத்திட்டுஇருக்கே..?

விவசாயி: அது பழகினமாடு தம்பி..,அதுவே சுத்திக்கும்..,

MBA : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…!
எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி: அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம் வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..

MBA : அது சுத்தறதை நிறுத்திட்டு.,ஒரே இடத்துல நின்னு.., தலைய மட்டும்ஆட்டினா..! அப்ப எப்படிகண்டுபிடிப்பீங்க..?

விவசாயி: இதுக்குதான்தம்பி., நான் என்மாட்டை காலேஜூக்கெல்லாம்
படிக்க அனுப்பலை..!

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (9-Jan-15, 12:56 pm)
பார்வை : 566

மேலே