நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதை போட்டி 2015

நாளைய தமிழகம் நல்லதே நடக்கட்டும்!
வளம் பெருகட்டும்; வாழ்வு சிறக்கட்டும்!
எளியோர் வாழ்வு ஏற்றம் பெறட்டும்;
ஏழ்மை நீங்கட்டும் ;ஏற்றத் தாழ்வு அகலட்டும்
ஊழல் எங்கும் என்ற நிலை மாறட்டும்
உத்தமர் ஆள வழி பிறக்கட்டும்
குடிமகன்கள் திருந்தட்டும்
குடியில்லா தமிழகம் காணட்டும் ;
அன்றாடம் மூடப்படும் தொழில்கள் பல ;ஆட்குறைப்பு நிலை இன்று ;
அகலட்டும் தொழிலாளர் துன்பம் ;செழிக்கட்டும் அவர் வாழ்வு நன்று !
நாளைய தமிழ் ஆட்சித் தமிழாக மலரட்டும்;
நல்ல தமிழ் அறிவியல் சொற்கள் பரவட்டும்;
நானிலம் முழுதும் தமிழ் அரசாளட்டும் ;ஆதலால்
தமிழால் இணைவோம் ;தமிழரை இணைப்போம்!!
--------------------------------------------------------------------------------------------------------
இது எனது படைப்பு இந்த படைப்புக்கு நானே உரிமையாளர் என உறுதியளிக்கிறேன்
-------------------------------------------------------------------------------------------------------------------------
G.சண்முகநாதன் (நாதன் பிரகாஷ்)வயது; 52
1/283 A காமராஜர் தெரு சீனிவாசபுரம் மயிலாடுதுறை -1

எழுதியவர் : G.சண்முகநாதன் (நாதன் பிரகா (12-Jan-15, 2:32 pm)
பார்வை : 192

மேலே