வெண்பா எழுதுவோம்

வெண்பாவுக்கான இலக்கண குறிப்புகள்
குறில் நெடில் தனித்து அல்லது ஒற்றெடுத்து வருவது நேர் அசை (தேர் ஏன் நீ தென் )
இரு குறில குறில்நெடில் இருகுறில் ஒற்று குறில நெடில் ஒற்று நிரை அசை (நிரை படம்
சுறா )
அசை வாய்ப்பாடு :
நேர் நேர்----- தேமா
நிரை நேர்----- புளிமா
நேர் நிரை----கூவிளம்
நிரை நிரை----கருவிளம்
---இவை ஈரசைச் சீர் வாய்ப்பாடு
இதில் ஒவ்வொன்றிலும் நேரசையை சேருங்கள் காய்ச்சீராகும் .
நேர் நேர் நேர் --- தேமாங்காய்
நிரை நேர் நேர் ---புளிமாங்காய்
நேர் நிரை நேர் ---கூவிளங்காய்
நிரை நிரை நேர் ---கருவிளங்காய்
---இவை மூவசைச்சீரில் காய்ச்சீர் ஆகும் இதில் இறுதியில் நிரை வர கனிச்சீராகும்
கனிச்சீர் வெண்பாவில் வரக் கூடாது
வெண்பாவில் ஈற்றடி மூன்று சீர்கள் கொண்டு அமையும் .
ஈற்றுச் சீர் காசு நாள் மலர் பிறப்பு என்பதுபோல் அமைய வேண்டும்

இந்த இலக்கண விதி கொண்டு ஒரு புகழேந்தியின் ஒரு நள வெண்பாவை
அசை பிரித்து அலகிட்டு ஆராய்வோம் :

செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான் மங்கையர்கள்
தம்மனத்தை வாங்கும் தடந்தோளான் ----மெய்ம்மை
நளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்
உளனென்பான் வேந்தன் உனக்கு ,

செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான் மங்கையர்கள்
நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நிரை நேர்
கூவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
(மூவசைச் சீரில் காய் முன் நேர் வர அமைக்கப் பெற்றிருக்கிறது )

தம்மனத்தை வாங்கும் தடந்தோளான் ----மெய்ம்மை
நேர் நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் -----நேர் நேர்
தேமாங்காய் தேமா புளிமாங்காய் -------தேமா
(காய் முன் நேர் மா முன் நிரை சரியாக அமைந்திருக்கிறது )

நளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்
நிரை நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நேர் நேர்
புளிமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் தேமா
(முந்திய அடி தேமா முன் நிரை காய் முன் நேர் மிகவும் சரி )

உளனென்பான் வேந்தன் உனக்கு ,
நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர்
புளிமாங்காய் தேமா (ஈரசை ஈற்றுச்சீர் பிறப்பு என்பது போல் )
காய் முன் நேர் மா முன் நிரை.

மேலே சொன்ன வெண்பா விதிக்கு உட்பட்டு நடக்கிறது இந்த வெண்பா
பாராட்டுக்குரியவர் புகழேந்தி. மேனிலத்தும் நானிலத்தும் வெண்பாவில்
நின்னை மிக்கான் யார் ? புன்னகைக்கிறார் புகழேந்தி .

கண்ணினில் காதலாள் கரிய நிறத்தினள்
பெண்களில் எல்லாம் பேரழகி ---கிளியோபாத்திரா
நீலவிழிகளால் கோலோச்சினாள் அவள்
காலடியில் கிடந்தது உலகு.

விரும்புவோர் இந்தக் கரிய அழகியை வெண்பாவாய் ஆக்கிக் காட்டுங்கள்

எழுதியவர் : கல்பனா பாரதி (12-Jan-15, 4:02 pm)
Tanglish : venba ezhuthuvom
பார்வை : 509

மேலே