• நாளைய தமிழும் தமிழரும் -பொங்கல் கவிதை போட்டி 2015

முந்தைய மொழியில் அதிபதி யவள்
அந்நிய ஆதிக்கத்தில் அழிந்திடாள் -தூய
சிந்திய லோடு செம்மொழி யாய்
சீர்த்த நாகரிகம் பொருந்தியவள் ,
பிறமொழி சாரா வேர்ச்சொல் நிறைய
அறநூல் நோக்கி ஆராய சிறந்த
மன்பதை நீயாவாய் தமிழா உலவு
உன்னால் தழைத் தோங்கும்
அறிவியல் அன்றே வள்ளுவன் வாய்
தெறித்ததே திருக் குறளாய் ஆதலால்
உருசிய நாட்டிலே உன்னத நிலையாய்
உருக்குலையா உயிரோ வியமாய் ..
முப்பாலை சுவைத்து வானோக்கிப் பாய்
தப்பாது நீ தரணியாழ் பதினெண்
கீழ் மேற்கணக்கைப் புசி பார்போற்ற
வாழ்ந்து புதுமைக் காண்.
ஏற்றுமதி செய்த தமிழ னின்று
நாற்றாய் நாடு கடந்து அந்நிய
நாட்டிலே அறுவடை யாகி சீர்
குலையும் நிலை யுணர்நீ .
நேற்றைய தமிழனாய் நந்தேசம் திரும்பி
காற்றாய் கலியுகத்தைப் புரட்டு நம்நிலை
திக்கெட்டும் பரவட்டும் நாளைய நாளை
தமிழும் தமிழனுமே ஆளட்டும் .
இரா .பிரியாராம்
கிருட்டினகிரி