சாதி ஒழி மதம் அழி சாதி “பொங்கல் கவிதைப்போட்டி 2015”

குருதி மொட்டொன்று விரிந்து
பூமியைப் பார்க்க ஆவலாய் எட்டிப் பார்த்தது

மண்ணுக்கும் பொன்னுக்கும் போட்டியிட்டு
சாதிப் பெயரால் சகதியில் சண்டையிட்டு
கருங்குரங்குகளாய் முகங்கள் மாற

முள்ளில் பட்ட சேலைப் போல்
கிழிந்த மனங்களும்
தீயிட்டு கருகிய உடல்களும்

எதற்கு சண்டை போடுகின்றனர்
என்று தெரியாமல் அழுகின்ற குழந்தை முகமும் .

அங்கங்கே சாதிப் பெயர்
கொண்ட பலகைகளும்.
சுட்டெரிக்கும் வாசகங்களும்.

பெண் என்றும் பாராமல்
குழந்தை என்றும் இரக்கம் காட்டாமல்
அடி உதைகளும்.

ஓசையற்ற செருப்படி சத்தங்களும்
வெள்ளமாய் பெருக்கெடுத்த உதிரமும்

என் சாதியா! உன் சாதியா! என்ற பேச்சுக்களும்.
பேனா எடுக்க வேண்டியகைகளில் ஆயுதங்களும்.

கண்ணுக்கு தெரியாத சாதிக்காக
கண்முன்னே நடக்கும் பல அவலங்களையும்
பார்த்து மீண்டும் சென்றுவிட்டாள்
தன் தாயின் கருவறைக்குள்.





(இந்த படைப்புக்கு நானே முழு உரிமையாளர் இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.)

பு.புவனேஸ்வரி
பூதனுர் (கிராமம் )
பரண்டப்பள்ளி (அஞ்சல் )
போச்சம்பள்ளி (தலுக்க)
கிருஷ்ணகிரி (மாவட்டம்)-635206

எழுதியவர் : புவனா சக்தி (12-Jan-15, 5:57 pm)
பார்வை : 159

மேலே