தைப்பொங்கல் கவிதை திருவிழா போட்டி-2015 சாதி ஒழி மதம் ஒழி சாதி ஒழி

சாதி ஒழி ! மதம் ஒழி ! சாதி ஒழி !

சாதிகள் இல்லையடி பாப்பா
என்றார் பாரதி !
சாதி இரண்டொழிய வேறொன்றுமில்லை
என்றார் பெரியார் !
இவர்களது வார்த்தை எங்கே போனது ?
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்
சாதி சான்றிதழ் கேட்பது எதற்கு ?
வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு எதற்கு ?
நிறத்தால் மனிதர்களை ஒதுக்கியது
இன்னும் எத்தனை காலம் ?
சாதியின் பெயரில் ஒற்றுமை இல்லை !
மதத்தின் பெயரில் ஒற்றுமை இல்லை !
எந்த சாதியாக இருந்தாலும்
மதமாக இருந்தாலும்
அனைவரும் உடன்பிறவா சகோதரர்களாக
பழகும் நட்பில் இருக்கிறது ஒற்றுமை !
நிறத்தால் ஒதுக்குவதை விட்டுவிட்டு
குணத்தால் ஒன்றுபட பாடுபடுவோம் !
இனம், சாதி என்னும் வேற்றுமையை களைந்து
தமிழன் என்றொரு இனத்தை மட்டும் பாதுகாப்போம் !
சாதி ஒழி ! மதம் ஒழி ! சாதி ஒழி !


- S.Nithyalakshmi
64/7A,Philominal nagar
Minnagar
Thirukanoorpatti post
Thanjavur[dt]-613303

Age :27
ph.no : 8056450112

எழுதியவர் : S.Nithyalakshmi (15-Jan-15, 11:06 pm)
பார்வை : 64

மேலே