மிச்சங்கள்

வறண்டு போன
மணலில் மிஞ்சிய
காலடிச் சுவடுகளாய் ...


உள்ளங்கை
நழுவிய
கடைசித் துளி
நீராய் ...


நிசப்தம்
தொலைந்து போன
தனிமையாய் ...


கல்லறையையும்
கடந்து
காய்ந்து கிடக்கும்
சிறு பூவாய் ...


கடந்து போன
பல காட்சிகளும்
மிச்சமாகிப் போன
சில நினைவுகளும் ...



- கிருத்திகா தாஸ்...

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (16-Jan-15, 7:34 pm)
Tanglish : michangal
பார்வை : 190

மேலே