பெண்ணினமா இவர்கள் -கடுப்பில் உருவான கவி

பெண்ணினமா இவர்கள்
இல்லை இல்லை
பெண்ணெனும் பெயரில் திரியும்
ராட்சசிகள் .
பெற்றவர் பட்ட துயர்
பொருட்டும் இல்லை இவர்களுக்கு
மற்றவர் விளித்தாலும் -ஏற்க்கும்
மனதும் இல்லை இவர்களுக்கு .
நடுத்தெருவில் முத்தமிடுவர்
கடற்கரையில் கட்டிப்பிடிப்பர்
திருமணத்தின் பின் நடப்பவற்றை
தெருமுனையில் முடித்திடுவார் .
நாகரிக தாகத்தால்
நாணம் இன்றி அலைகின்றார்
காம மோகத்தால் உருவான
கருவையும் அழிக்கின்றார்
களியாட்டங்கள் முடிந்தவுடன்
கல்யாணத்தில் நுழைகின்றார்
கற்புக்கரசி தான் கற்பூரத்தை
அணைக்கின்றார் .
பேருக்காக பிள்ளையை சுமந்து
ஆயா வளர்ப்பில் விடுகின்றாள்
தாய்ப்பாலுக்கு பதிலாக
புட்டி பாலை கொடுக்கின்றார் .
புத்திக் கெட்ட இவ்வினத்தை
பெண்ணினம் என்று உரைப்பதா.?
என்னினம் என்று இவர்கள் சொன்னால்
பெண்ணினமாய் நான் தலைக் குனிவேன் .!!!
(ஒரு சில பெண்களுக்கு மட்டும் )