வாலி வதம்
அக்னி சாட்சியுடன் கைஅடித்து சத்தியம் செய்து
சுக்ரீவனை நண்பனென பிரமாணம் நீ செய்தாய்;
வானரமாயினும் மனிதனுக்கு சமமே என
நட்பென்ற சொல்லிற்கு நல் பொருள் புகட்டி
நல்லோர் காரியம் செவ்வனே நீயும் செய்தாய்;
நீதியே நீ எனவும், தருமமே நீ எனவும்
நான் உன்னை நினைத்த போது
குடும்ப சச்சரவில் சகோதர்கள் மோத
மறைந்து வாலியை அம்பெய்து நீ கொன்றாய்;
க்ஷத்ரிய தர்மத்தில் மரம் பின் மறைந்து
வேட்டையாடுதலில் தவறேதுமில்லை
என்றென கூறி பழி களைய நீ பார்த்தாய்;
கட்டியவளை கடத்தி சென்ற
இராவணனை போர்களத்தில்
நிராயுதபாணியாக ஆக்கிய வீரன் நீ,
'இன்று போய் நாளை வாராய்' என்று
வாய் மலர்ந்து அருளிய மாறன் நீ,
‘தம்பி அவன் மனிதன் போலும்
அண்ணன் வாலி வானரமே’ எனும்
தர்க்கம் உனது விசித்திரமே!
நேரில் நின்று வாலியை வென்று
சுக்ரீவனுக்கு பட்டம் சூட்டியிருந்தால்
என் மதிப்பில் இன்று நீ
மேலும் உயர்ந்திருப்பாய்!