வெற்றியாளர்கள் - பொங்கல் கவிதைப் போட்டி

வணக்கம் தோழர்களே....

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பொங்கல் கவிதைத் திருவிழா – கவிதைப் போட்டியின் இறுதி முடிவுகளை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்....

இறுதி முடிவுகளுக்கு முன்னர் சிறப்பு பாராட்டு பெறும் இரண்டு படைப்பாளிகளை அறிமுகம் செய்கின்றோம் !

போட்டியின் சிறப்பு ஆக்கத்திற்கான (227963) விருது ஒன்றினை மூன்று பரிசுகளுக்கு அப்பாற்பட்டு இவர் பெறுகிறார் மரபின் வகைமையில் வந்துள்ள வெண்பா என்பதால் இவ்விருது ஈரோடு தமிழன்பன் அவர்களால் அளிக்கப்படுவது

அவர் தளத்தின் மூத்த படைப்பாளிகளுள் ஒருவரான
=============திருமதி.“சியாமளா ராஜசேகர்” =============

சியாமளா அம்மாவிற்கு எம்முடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்


மேலும் “சாதி ஒழி! மதம் அழி! சாதி!” என்ற தலைப்பின் கீழ் மிக அருமையான ஒரு படைப்பை(227301) எழுதி பாடலாசிரியர் யுகபாரதி அவர்களின் மனம் கவர்ந்த ஆக்கத்திற்கு சொந்தம் கொண்டாடுவதோடு, யுகபாரதி விருதினையும் பெறுகிறார் சிரேஷ்ட படைப்பாளி
=============திருவாளர். ஜின்னா அவர்கள் ! =============

திரு.ஜின்னா அவர்களை பாராட்டி கௌரவிப்பதில் பெருமையடைகின்றோம் !


இனி..மீதமிருப்பத்து....பொங்கல் கவிதைப் போட்டியின் ஜாம்பவான்களின் பட்டியல்.....இதோ ஒவ்வொரு தலைப்பிலும் பணப் பரிசுபெறும்
படைப்பாளிகள்....!
============================
சாதி ஒழி! மதம் அழி! சாதி!

• முதல் பரிசு – கவிதாசபாபதி 227828 – 1500 ரூபாய்
• இரண்டாம் பரிசு – சீதளாதேவி 228963 - 1000 ரூபாய்
• மூன்றாம் பரிசு - ராதா முரளி 228340 – 500 ரூபாய்
============================
இப்படி நாம் காதலிப்போம்

• முதல் பரிசு - எசேக்கியல் காளியப்பன் – 228882 - 1500 ரூபாய்
• இரண்டாம் பரிசு – கிரிகாசன் – 229119 - 1000 ரூபாய்
• மூன்றாம் பரிசு – குமரேசன் கிருஷ்ணன் – 228498 - 500 ரூபாய்
============================
நாளைய தமிழும் தமிழரும்

• முதல் பரிசு – ஜின்னா – 228145 - 1500 ரூபாய்
• இரண்டாம் பரிசு – மீ.மணிகண்டன் – 228766 - 1000 ரூபாய்
• மூன்றாம் பரிசு – கருமலைத்தமிழாழன் – 228356 - 500 ரூபாய்
============================
பரிசுபெறும் படைபாளிகள் அனைவரையும் பரிசளித்து, பாராட்டி கெளரவிக்கின்றோம்.

தொடர்ந்தும் மிக நல்ல படைப்புகளை எழுதி தான் சார்ந்த சமூகத்திற்கும் நாட்டிற்கும் எழுத்தால் சேவை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் !

இந்த தைப்பொங்கல் கவிதைப் போட்டியினை நடாத்த உறுதுணையாக இருந்த நடுவர்கள், அனுசரணையாளர்கள் இன்னும் பல நன்றிக்குரியவர்களின் பட்டியலோடு நிறைவறிக்கையினை சுமந்துக் கொண்டு வருகின்றேன் மீண்டும் மாலையில்...!

வெற்றிப் பெற்றவர்களை வாழ்த்தி உயர்த்துங்கள்....களிப்புருங்கள் !

(பகிருங்கள்)

எழுதியவர் : விழாக்குழு (31-Jan-15, 9:34 am)
பார்வை : 465

மேலே