நிஜம் தேடும் சமயம்

நிஜம் .
மிக அழகாய்,
மன கேள்விகளுக்கெல்லாம் விடையாய்-ஒரு புறமே !
மறுபுறமோ, மாய கண்ணாடியில் அதன் பிம்பம் -பிசகின்றியே !
நடுவில் நாமும், விடை விளைந்தே !

நன்கு பகுத்தறிந்த -நம்மில்,
எண்ணி சிலர் நிஜம் நோக்கி நகர !
எண்ணிலடங்கா மீதி பலர்,
மாய கண்ணாடியின் பிம்பத்தில் முட்டி முட்டி ,
நிஜத்தை அடைந்ததாய் திருப்தி இன்றி காலம் கழிக்க-மறுபுறமோ,
நிஜத்தில் லயித்தோர், தன்மை கரைந்து, நிஜமாகவே ஆகியும் விட்டனர் !

எழுதியவர் : ஷிவிரா !! (31-Jan-15, 7:56 pm)
சேர்த்தது : mahakrish
பார்வை : 119

மேலே