நெஞ்சத்து ஓலைகள்

நாணமுள்ள ரோசா
ஒன்று தலை குனிந்து
பார்த்ததுண்டோ, நான்
கண்டேன் அவள் அழகிலே...

நெஞ்சமெல்லாம் குத்தும்
அவள் பார்வை வலிக்கையில்
சுகமா இருக்கு...

என் காதலை மனம்
திறந்து அவளிடம் சொல்ல
முடியவில்லை. என்ற ஏக்கம்
மட்டுமே கண்ணீர் தூவுது.

சாலையோரத்தில் நான்
ஒளிந்து நின்று உன்னை
ரசிக்க, உன் நயனங்கள்
என்னைத் தேட, ஆசையில்
நானும் பார்க்க இமைகள்
வெறுக்குதடி.

நிலா இரவிலே கனாக்களில்
என் மேல் பொழிகின்ற
பனித்துளிக்கு நீ குடையாய்,
அதே போல் உன் மூச்சின்
சுவாசமாக நானிருக்க வேண்டும்.

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (1-Feb-15, 12:29 am)
பார்வை : 87

மேலே