எழுத்துதளம் - ஆதலின் காதல் செய்வீர்

கவிதைகள் எழுதிடும் கைகளும்,
கவிதையில் இருந்திடும் பொய்களும்,

பொய்களில் பிறந்திடும் மெய்களும்,
மெய்களில் துறந்திடும் கனவுகளும் ,

கனவுகளில் வந்திடும் கதைகளும்,
கதைகளில் ஒளிந்திடும் நிஜங்களும்,

நிஜங்களில் மறைந்திடும் நியாயங்களும்,
நியாயங்களில் கரைந்திடும் உள்ளங்களும்,

உள்ளங்களில் எழுந்திடும் உண்மைகளும் ,
உண்மைகளில் உறைந்திடும் நெஞ்சங்களும்,

நெஞ்சங்கள் வடித்திடும் கவிதைகளும் ,
காதலித்து கஷ்டப்பட்ட இதயங்களும் ,

இதயத்தால் காயப்பட்ட உறவுகளும் ,
உறவுகளால் விலக்கப்பட்ட உணர்வுகளும்,

உணர்வுகளால் எழுதப்பட்ட கவிதைகளை ,
காகிதத்தில் எழுதிய காலம் கடந்து ,

கணிபொரியிலே எழுத வைத்து ,
கவிதைகளுக்கு கருவியை அமைந்த,

எழுத்து தளத்தை ஆதலின் காதல் செய்வீர்.

எழுதியவர் : கவிப்ரவீன்குமார் (3-Feb-15, 6:01 pm)
பார்வை : 69

மேலே