எழில்

இந்த
எழிலான
மன நிலை

இன்று

பங்களாக்களில்
வசிக்கும்
எந்த மனிதருக்காவது உண்டோ ???

கேள்விக்குறி தான்!!!!!

இயற்கையை
சார்ந்த வாழ்க்கை !

இயல்பான
வாழ்க்கை !

இருப்பதை
இன்பமாய் அனுபவிக்கும் வாழ்க்கை !

இது இப்படி தான் என
இயல்பாய் வாழும் வாழ்க்கை

இந்த நாள்
இனிமை என ஏற்கும் வாழ்க்கை !

இன்னல்கள் வந்து போகும்
என மனதில் பதித்து வாழும் வாழ்க்கை !

மன சலனமற்று
துரித வாழ்க்கையின் பின்
பேயாய் பிசாசாய் ஓடாது
எம தர்மராஜாவை எட்டத்தே நிறுத்தி

கருவறையிலிருந்து
வெளி வரவும் சில்லறை
கல்லறை செல்லவும் சில்லறை

என இருந்தாலும்

பணம் எனும் தாளிற்காக
தவிக்காமல்

நாங்கள் இப்படி தான் வாழ்வோம் என
வளமாய் வாழும்
கிராம மக்கள் வசிக்கும்
வீடும் வாழ்க்கையும்
எழில் தானே ?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
====கிருபா கணேஷ் =======

எழுதியவர் : kirupaganesh (6-Feb-15, 10:59 pm)
Tanglish : ezil
பார்வை : 128

புதிய படைப்புகள்

மேலே