வழக்கொழியும் பெயர்கள்

வழக்கொழியும் பெயர்களின்
எண்ணிக்கை
அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

புதிய பெயர்களுக்கான
வங்கிகளில்
“சாமி”கள்
இனி இருபோதும்
இருக்கப் போவதில்லை,

தன் பெயரும்
பயனற்றுப் போனது
ஏனென்றே,
கடவுளுக்கும் விளங்கவில்லை,

இனம், மொழி, வட்டாரம்
எதனையும்
இப் பெயர்கள்
குறிப்பதாகவும் இல்லை,

பெயர் கேட்டதும்,
அர்த்தம் கேட்பது
கூடுதல் வேலையானது,

அந்த கூடுதல் வேலையாக,
மனிதர்கள் என்னிடம்
நின்று போவது மட்டும்
எனக்கு நிம்மதியானது!

எழுதியவர் : புதியகோடங்கி (13-Feb-15, 10:41 am)
பார்வை : 92

மேலே