துணை அவன்

உடையவன் எவனவன் தனதென இல்லாதவன்..
மனமெனும் கோயிலில் நிலைத்தே நிற்பவன் ..
மருள்தனை நீக்கியே மயக்கமும் அழித்தவன்
பொருளது உலகிலே நிலையிலை என்றவன்..!
..

நிரந்தரம் ஆனவன் அனுதினம் காப்பவன்..
அசரீரி யாகவே அருளியே உறைபவன்..
கனவிலும் மறந்திடேன் எத்துனை பிறவியும்
பிறப்பினும் அவனது பாதமலர்க் கமலமே!

ஷண்முகா..ஷண்முகா!.சரவண பவனே!

எழுதியவர் : பாலகங்காதரன் (18-Feb-15, 5:56 pm)
சேர்த்தது : பாலகங்காதரன்
Tanglish : thunai avan
பார்வை : 274

மேலே