காதலன்
காதலன்
* பார்வை யதனால் சுட்டெரிதாய்
பகை வனோ என மருண்டிட செய்தாய்
* அயலானோ என நினைத்திட வைத்தாய்
அன்பறியா அற்பனோ என வசையும் பெற்றாய்
* பார்க்கும் இடமெல்லாம் சுற்றி திரிந்தாய்
பார்க்காத பொழுது பார்த்து மகிழ்ந்தாய்
* கானா நாட்களில்
கனவில் வந்தாய்
* கண்ட நாட்களில்
கடுஞ்சொல் தந்தாய்
* புறத்தே நீ வில்லனே ஆனாலும்
அகத்தே என்றும் என் காதலனே .......
சிவ.ஜெயஸ்ரீ