வெள்ளிகிழமை

வேணா பேசாம இருங்க
பேரன் பேத்தி எடுத்த வயதில் இது என்ன ஆசை!
வீட்டுல எல்லாரும் இருகாங்க என்று ,
தன் கணவனை வெக்கத்துடன் பார்த்தாள் தங்கம் !

பேசாம இரு
யார் இருந்தாலும் சரி
நீ போயி கதவை சாத்திட்டு வா என்றார்
70 வயது நிரம்பிய மாணிக்கம் தன் மனைவியை பார்த்து .

நீங்க என்ன சொன்னாலும் கேக்கமாட்டிங்க ,
இன்னும் நீங்க மாறவேயில்லை
என்று சொல்லி செல்லமாக சிணுங்கி
தன் கணவன் சொன்னதை மீறாமல் செயலாற்றி அருகில் வந்தால் தங்கம் ,


ஒவ்வொரு வெள்ளிகிழமையும்
உங்களுக்கு இதே ரோதனையா போச்சு என்று
தன் கணவன் அன்புடன்
சூடிய பூவை ஆசையுடன்

வருடி பார்த்துக்கொண்டே நகர்ந்தாள் கோவிலுக்கு ......................................

எழுதியவர் : விவேகா ராஜீ (22-Feb-15, 4:17 pm)
சேர்த்தது : விவேகா ராஜீ
Tanglish : vellikizhamai
பார்வை : 306

புதிய படைப்புகள்

மேலே