பறந்தால் வானம் பக்கம் வரும்

பட்டாம் பூச்சிபோல் இறகு வேண்டுமா ?
பட்டென தேடத் தொடங்குவோம் இனிமையை !
சிட்டுக் குருவி போல் சிறகு வேண்டுமா ?
சிரித்து மகிழுவோம் இந்தப் பொழுதை...!! மன
விழிப்போடு இருப்பவர்களுக்கு அந்த
விரிந்த வானம் ஒரு பூச் செண்டு - இதை
விளங்கிடாமல் உறங்குவோர்க்கு இங்கே
விளைந்த பூமி ஒரு சிறைக் கூண்டு...!!