மலர் அவள் அவன்
பறித்தாள் மலர்கள் அவளும்தோட் டத்தில் -------1
பறித்த மலர்களும் கண்ணினை நெஞ்சை
பறித்தே இருக்க மலரினில் தன்னை
பறிகொடுத்து நின்றாள் அவள் .
பறித்த மலரழகில் தன்னை பறிகொடுத்தாள் ---------2
தன்னிடம் தன்னை பறிகொடுத்தான் அவன்
பறித்தது மலர் பறிபோனது மனமே
-----கவின் சாரலன்
1. இன்னிசை வெண்பா
2. நிலை மண்டில ஆசிரியப்பா