சூப்பர் ஜோக் =படித்தது

MAN : ஹலோ,சன் மியூசிக்கா?

ANCHOR : ஆமா சார்.உங்க மனசுல உள்ளதை எங்ககிட்ட பகிர்ந்துகொள்கிற நிகழ்ச்சி சார் இது.

MAN : ஓ...அப்படியா மேடம்.

ANCHOR : ஆமா சார்.அப்பறம்,நீங்க சொல்லுற SONGஐ யாருக்கு டெடிகேட் பண்ண சொல்றீங்களோ,நாங்க அவங்களுக்காக ஒளிபரப்புவோம் சார்.

MAN : சரி மேடம்.நான் ஒரு விசயத்தை உங்க நிகழ்ச்சியில ஷேர் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்.

ANCHOR : தாராளமா சொல்லுங்க சார்.

MAN : அதாவது இன்னைக்கி காலைல ஒரு பர்ஸ் கீழே கிடந்துச்சுங்க.அத எடுத்து திறந்து பாத்தேன்.பர்ஸுக்கு உள்ளே பத்தாயிரம் பணம்,கிரெடிட் கார்டு,கோல்டு காய்ன் இருந்துச்சு மேடம்.

ANCHOR : அப்படியா சார்.அப்பறம் என்னாச்சு?

MAN : அதுல அட்ரஸ் இருந்துச்சு.

S.முருகேசன்,
S/O சுந்தரம்,
மேலத்தெரு,
காளியம்மன் காலனி
மானாமதுரை
கீழ போன் நம்பரும் இருந்துச்சு மேடம்.

ANCHOR : சார் நீங்க ரெம்ப தங்கமான மனசு உள்ளவர்
சார்...அப்பறம் அந்த பர்ஸ அவருக்கு அனுப்பிட்டிங்களா?

MAN : இல்ல மேடம்.அவருக்காக நான் ஒரு பாட்டு டெடிகேட் பண்ணனும்.

"நன்றி சொல்ல உனக்கு,வார்த்தை இல்லை எனக்கு" இந்த பாட்ட அவருக்கு போடுங்க.நான் கிளம்புறேன்.

ANCHOR : அடடா...களவாணி பயகூடவா இம்புட்டு நேரம் பேசிட்டு இருந்தேன்.

எழுதியவர் : (10-Mar-15, 8:12 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 182

சிறந்த நகைச்சுவைகள்

மேலே