காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்

அவள்.....!
கைமீறிப் போயிருந்தால்
காத்துக்கொண்டிருப்பேன்....
கைமாறிப்போனதால் தான்
கண்ணீர் வடிக்கின்றேன்....

ஆச்சர்ய குறியாய் இருந்த என் காதல்,
அவள் வகிட்டில் எவனோ வைத்த முற்றுப்புள்ளியால்,
என் வாழ்க்கை கேள்விக்குறியானது.....
இருந்தும் தொடர் புள்ளியாய் பயணித்துக் கொண்டிருக்கின்றேன்.....
அடுத்த ஜென்மத்திலாவது அவளை மணந்துவிட வேண்டுமென்று......

அடுத்த ஜென்மம் என்பது நம்பப்படாமல் இருக்கலாம்
ஆனால்,காதலனை பிரிந்த ஒவ்வொரு காதலியும்,
காதலியை பிரிந்த ஒவ்வொரு காதலனும்,
காத்துக் கொண்டிருப்பது,,,,,,,
அடுத்த ஜென்மத்திற்காகத்தான்....

மரணமே,
என் முகவரி உன்னிடமிருந்தும்
நீ வருவதற்கு ஏன் இந்த தாமதம்...

கடவுளே...!
தயவு செய்து காதலில் தோற்றவர்களை
கருணைக் கொலை செய்து விடு
இல்லாவிட்டால்,
அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள்.....!

எழுதியவர் : அகத்தியா (14-Mar-15, 5:28 am)
பார்வை : 191

மேலே