நீ கைவிட்டதனால்

கண் தொட்டுக்
கலங்கச் செய்யும்
காற்றுக் கூட கனக்கின்றதடி...
துணிவாகச் சாலைகளின் மீது
என் கைவிரல் பற்றி நடந்த
உன் கரங்கள் இன்றி
தனிமையில் துடிக்கின்றதடி...
என் காதலோடு சேர்த்து
என் கைவிரல்களையும்
"நீ கைவிட்டதனால்"...
செ.மணி