திசுக்கள் எல்லாம் காதல் III

நான் அழகா ...? எனக்
கேட்டிருக்கும் பொழுதெல்லாம்
அ...ழ...கு.. என
மூன்றெழுத்துக்களால் நிரப்பிவிட
சாத்தியமாவதில்லை
எனக்கு......


என்னைத் திறந்தே
வைத்திரு............!! உன்
கைப்பை கண்ணாடிகளைப் போலவே
நானும் .... எதிரொலித்துக்
கிடக்கிறேன்.....


கவிஞர்களிடம் பேட்டி
தவிர்...
இந்தக் கவிதை என்னதில்லையென
உன்னைப் பார்த்து
சொல்வதைத் தவிர.... வேறு
பதில் இல்லை அவர்களிடம்....

விடைபெறுகையில் தவறாமல்
சொல்லியிருப்பாய்...
பார்த்துப் போ....
என்னால் மட்டும் முடியுமா
என்ன....?!
உன்னைப் பார்க்காமல் போய்விட...!


நேற்றைய உன் கனவில்
நான் வந்திருந்ததாகச் சொல்லும்
உன்னிடம் எப்படி
சொல்லித் தொலைக்க...
உன்னால் நான்
தூங்குவதே இல்லையென....?!!


நகங்கள் மடித்து
வெண் புள்ளிகளின் பலன்
கேட்கிறாய்....
காதலில் விழுந்த கணமும்
காரணமும்
இப்போது பகிர்வதாய் இல்லை..

எழுதியவர் : நல்லை.சரவணா (18-Mar-15, 12:32 pm)
பார்வை : 218

புதிய படைப்புகள்

மேலே