துணைவி

வாழாத வாழ்வை என்னோடு வாழ,
வையகம் கூடி வாழ்த்தி,
பெற்ற சொந்தம் பிரிந்திட நீயும்,
வந்தாய் எனை நம்பி.
கலங்கா விழியுமாய் வாடா முகமுமாய்,
வைத்திட நானும் உனை,
இன்பத்திலும் துன்பத்திலும் வைப்பேன் என்
சொர்கத்தின் ராணி என...!!!