கவிதை கொலை

நண்பனின் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது பேசியது நண்பனின் அம்மா டேய் கிரீஸ் நீ ரெண்டு மூனு கவிதை எழுதிகிட்டு சீக்கிரம் வீட்டுக்கு வாடா உன் கவிதைக்காகத்தான் காத்துகிட்டு இருக்கோம் லேட் பன்னாதடா ப்ளீஸ் என்று கூறியதும் இவனுக்கு ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது.. நமது கவிதைக்கு இவ்வளவு வரவேற்பா என்று மனம் பூரித்தவாறு கவிதையை எழுதிவிட்டு அங்கு விரைந்தான்


அங்கே சென்றதும் வீட்டு வாசலில் கூட்டமாய் இருந்தது என்னவென்று தெரியாமல் குழம்பி உள்ளே சென்றான் அங்கே நண்பனின் பாட்டி இறக்கும் தருவாயில் மூச்சு இழுத்துக் கொண்டிருந்தார் நண்பனின் அம்மா டேய் வந்துட்டியா கொடுமைய பாத்தியாடா உசுரு போகாம கஷ்டபடுறத . எல்லாரும் கருணை கொலை பண்ணுனு சொன்னாங்க எனக்கு என்ன பன்றதுனே தெரியல அப்பம்தான் உன் ஞாபகம் வந்துச்சு சீக்கிரம் அவங்க காது பக்கத்துல போய் உன் கவிதைய வாசிடா போற உசுரு நிம்மதியா போகட்டும்


கிரீஸ் - ???????

எழுதியவர் : கவிபுத்திரன் (20-Mar-15, 10:02 am)
Tanglish : kavithai kolai
பார்வை : 192

சிறந்த நகைச்சுவைகள்

மேலே