நாம்
அன்னியர்கள் நாட்டை ஆளும் போது
நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும்
என்றுதான் விரும்பினோம்
நம்மவர்கள் நாட்டை ஆளும் போது
ஏன் இந்த ஆட்சி என்று வெதும்புகின்றோம்
எதுவும் நம்மைத் திருப்தி படுத்துவதாய் இல்லை
ஆட்சிகள் கை மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை
திருப்தி அற்ற மனிதராக நாம்