களவுபோகும் சட்டம்

கண்கட்டி வித்தையடா
கல்லறையில் முடியுதடா...!

காலை முதல் மாலைவரை
கூவிக்கூவி விற்றிடுவான்;
கருப்புவெள்ளை சட்டைபோட்டு
களவுபோன சட்டத்துக்காய்..!
 
கால்பிடிக்கச் சொல்லிடுவான்
காத்திருப்போம் என்றுசொல்லி,
கால்நடையாய் நடக்கவிட்டு-
காசெல்லாம் தீர்ந்தபின்பு,
 
கட்சித்தாவும் கூட்டபோல
கையூட்டை வாங்கிக்கொண்டு;
கைவிரித்துச் சொல்லிடுவான்-
கடவுள்தான் துணையென்று..!
 
உண்மையென்று நம்பியவன்
உள்ளதெல்லாம் இழந்தபின்பு;
உலகமினி யில்லையென்று-
உயிர்விடுவான் கல்லறையில்...!

எழுதியவர் : ராக்கிங் ஜாக் (22-Mar-15, 9:27 pm)
பார்வை : 65

மேலே